அஜித் நடிப்புக்கு கிடைத்த பாராட்டு!
அஜித்குமார், `நேர் கொண்ட பார்வை' படத்துடன், 59 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.
இந்த படத்தில் அவர் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவர் வழக்கறிஞராக வரும் காட்சிகள் அனைத்தும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டன.
படப்பிடிப்பின்போது அஜித் ஒவ்வொரு காட்சியிலும் நடித்து முடித்தபோது, படக்குழுவினர் அனைவரும் கைதட்டி பாராட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வசனமும், நடிப்பும் சேர்ந்து அவருக்கு காட்சிக்கு காட்சி கைதட்டல்களை வாங்கி குவித்து இருக்கிறது!