“கணவருக்கு கோபம் வராது!”
தெலுங்கு நடிகரை காதல் மணம் புரிந்த நான்கெழுத்து நடிகை, திருமணத்துக்கு பிறகும் ‘பிஸி’யாக நடித்து வருகிறார்.
பிரபல கதாநாயகர்களின் காதலியாக-மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நெருக்கமான காதல் காட்சிகளில் தாராளமாக நடிக்கிறாராம்.
“இதுபற்றி உங்கள் கணவர் கோபப்பட மாட்டாரா?” என்று கேட்டால், சிரிக்கிறார். “என் கணவருக்கு கோபமே வராது. என்னை அவர் முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறார்” என்கிறார்!