நடிக்க வந்தது ஏன்?
மறைந்த டைரக்டர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் கணவரின் மறைவுக்கு பிறகு டி.வி. தொடர்கள் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.
தற்போது கீதா கைலாசம், ‘கட்டில்’ என்ற படத்தில், கதாநாயகனின் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். கதாநாயகி, சிருஷ்டி டாங்கே. எடிட்டர் பி.லெனின் கதை -வசனத்தை எழுதியிருக்கிறார். பாரம்பரிய விஷயங்களின் முக்கியத்துவத்தை சொல்லும் குடும்ப படமாக, ‘கட்டில்’ தயாராகிறது.