தீபிகா படுகோனின் கோபம் !
இந்தி நடிகை தீபிகா படுகோன், பிரபல இந்தி நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்துக்குப்பின் அவர் நடித்து வெளிவந்துள்ள படம், ‘சப்பாக்.’
‘சப்பாக்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தீபிகா படுகோனிடம் ஒரு நிருபர் கேள்வி கேட்டார். அந்த கேள்வி தீபிகா படுகோனை கோபப்பட வைத்தது. அந்த கேள்வி என்னவென்றால்-
‘ரன்வீர்சிங்கின் பணத்தைத்தான் நீங்கள், ‘சப்பாக்’ படத்தில் முதலீடு செய்து இருக்கிறீர் களாமே...?’
இந்த கேள்விக்கு கோபப்பட்ட தீபிகா படுகோன், ‘‘அது என் பணம்’’ என்று ஆத்திரமாக பதில் அளித்தார்.