யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது?
‘உச்சநட்சத்திரம்’ நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு மனைவியாக இரண்டெழுத்து நடிகை, வில்லியாக மூன்றெழுத்து நடிகை, இன்னொரு மனைவியாக ‘தாரா,’ மகளாக வாரிசு நடிகை ஆகிய 4 கதாநாயகிகள் நடித்து வருகிறார்கள்.
“படத்தில் பழைய கதாநாயகிகள் இரண்டு பேரும், மகள் வேடத்தில் வாரிசு நடிகையும் இருப்பதால் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் ‘தாரா’ நடிகைக்கு வந்து இருக்கிறதாம்.
தனக்குத்தான் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று டைரக்டரை அவர் வற்புறுத்தி வருகிறாராம். இதைக்கேள்விப்பட்டு மற்ற 3 கதாநாயகிகள், தங்களுக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்று கொடி பிடிக்கிறார்களாம்.
யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? என்றும், இவர்களின் கவுரவ பிரச்சினையை எப்படி தீர்ப்பது? என்றும் டைரக்டர் குழம்புகிறாராம்!