கொரோனாவை கருவாக கொண்ட பேய் படம்

கொரோனாவை கருவாக கொண்ட பேய் படம்

Update: 2020-05-21 21:53 GMT
அந்தக்காலத்து கிராமப்புறங்களில், “முனி அடித்து விட்டது..”, “மோகினிப் பேய் கொன்று விட்டது” என்று இரவு நேரங்களில் திகிலூட்டும் கதைகளை கற்பனை கலந்து சொல்வார்கள். “நடு நிசியில், ஒற்றை மாட்டு வண்டிக்காரரை மல்லிகை சூடிய மோகினி வழிமறித்து, வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்டது...” என்று பயமுறுத்துவார்கள். இப்போது உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனாவின் அராஜகமும் அப்படித்தான் ஆகிவிட்டது.

இதையே கருவாக வைத்து ஒரு பேய் படம் தயாராகிறது. பேயை கொரோனாவுடன் ஒப்பிட்டு திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

மேலும் செய்திகள்