பண்ணாரி அம்மன் கோவிலில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2019-05-16 22:15 GMT

சத்தியமங்கலம், 

விழிப்புணர்வு முகாமில் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு, தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைக்க வேண்டும் என்று குறித்து செயல் விளக்கம் அளித்தார்கள். 

இதில், கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்