கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

Update: 2024-05-06 13:29 GMT

புதுடெல்லி

டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையி்ல் நடந்த பண மோசடி தொடர்பாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு கெஜ்ரிவால் அமெரிக்கா சென்றிருந்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதாகவும், அப்போது தேவிந்தர்சிங் புல்லார் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி விடுதலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பின் அந்த அமைப்பிடமிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நிதியுதவி பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்