சிவகங்கை அருகே, கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2019-05-16 22:30 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த மதகுபட்டி அருகே அழகியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நகரம்பட்டி-பாகனேரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 19 வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருமயம் ஓனாங்குடி சலீம் வண்டியும், 2-வது பரிசை கல்லுப்பட்டி கார்த்திக்ராஜா மற்றும் வெள்ளரிப்பட்டி வசந்த் வண்டியும், 3-வது பரிசை துரும்புபட்டி சாதனா மற்றும் சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும், 4-வது பரிசை நகரம்பட்டி அம்பலத்தரசு வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை கல்லல் உடையப்பா மற்றும் நெல்லை மாவட்டம் வேலாங்குளம் கண்ணன் வண்டியும், 2-வது பரிசை மலம்பட்டி ராசு வண்டியும், 3-வது பரிசை சாத்தமங்கலம் வைரமணி வண்டியும், 4-வது பரிசை தேனி சிறப்பாறை வெண்டி முத்தையா வண்டியும் பெற்றது.

வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

மேலும் செய்திகள்