மானாமதுரை அருகே, மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி

மானாமதுரை அருகே மின்னல் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானான்.

Update: 2019-05-16 22:30 GMT
மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராவண கண்ணன். இவரது மகன் பிரவீன் (வயது 11). இவன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளான். தற்போது கோடை விடுமுறையையொட்டி தனது தந்தையின் சொந்த கிராமத்திற்கு பெற்றோருடன் வந்திருந்தான். இந்த நிலையில் நேற்று மாலை மாணவன் பிரவீன் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் பலத்த இடி- மின்னலுடன் லேசான மழை பெய்தது.

இதில் எதிர்பாராதவிதமாக மாணவன் பிரவீன் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் உடல் கருகி பரிதாபமாக இறந்தான். மேலும் மின்னல் தாக்கியதில் அருகில் இருந்த பனை மரத்திலும் விரிசல் ஏற்பட்டது. மாணவனின் உடலைப் பார்த்து அவனது பெற்றோர்கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதையடுத்து அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்