ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-01 22:45 GMT
தாமரைக்குளம்,

அரியலூரில் நகராட்சி ஆணையர் திருநாவுகரசு உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது, அரியலூர் மாவட்ட மேற்பார்வையாளர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பெரம்பலூர் சாலை, சின்னக்கடை வீதி, மார்க்கெட் தெரு, வெள்ளாளத்தெரு ஆகிய பகுதிகளிலுள்ள சிறு மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்