அந்தியூர் அருகே, பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே தார்சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-11 22:15 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று காலை 10.30 மணி அளவில் அந்த பகுதியில் ஒன்று திரண்டார்கள். பின்னர் தங்கள் பகுதியில் தார்சாலை அமைக்கக்கோரி அந்த வழியாக வந்த பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், ‘விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்