வெள்ளகோவிலில் விஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை
வெள்ளகோவிலில் விஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளகோவில்,
மூலனூர் அருகே உள்ள கும்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சக்திவேல் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வெள்ளகோவிலில் முத்தூர் ரோட்டில் ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார்,
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாலை கடையில் இருந்த சக்திவேல் விஷமாத்திரை சாப்பிட்டு விட்டார். அத்துடன் கடையில் இருந்தவர்களிடம் தான் விஷமாத்திரை சாப்பிட்டு விட்டதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக சக்திவேலை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.சக்திவேல் எதற்காக விஷமாத்திரை சாப்பிட்டார் என்று தெரியவில்லை. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.