சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-07-13 00:01 GMT
தேனி,

தேனி அருகே உள்ள கோட்டூர், பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன்(வயது28). இவர் மேடை அலங்கார தொழில் செய்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரெங்கநாதனுக்கு வேறு ஒரு பெண்னை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதனால் மனமுடைந்த சிறுமி தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து சிறுமியை அவரது குடும்பத்தினர் மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரெங்கநாதனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்