கேரளாவில் பா.ஜ.க. தொண்டர் அடித்துக் கொலை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வீச்சு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 30). பா.ஜ.க. தொண்டர். இவர் அண்டலூர் நகருக்கான பூத் கமிட்டி தலைவராக இருந்து வந்தார்.

Update: 2017-01-19 20:46 GMT
தலசேரி,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 30). பா.ஜ.க. தொண்டர். இவர் அண்டலூர் நகருக்கான பூத் கமிட்டி தலைவராக இருந்து வந்தார்.

சந்தோஷ் நேற்று முன்தினம் இரவு தார்மடம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பா.ஜ.க. தொண்டரை அடித்துக் கொன்றவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

தங்கள் கட்சி தொண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள பா.ஜ.க. இன்று கண்ணூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இதற்கிடையே, தலிபரம்பா என்ற இடத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை வீசினர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. 

மேலும் செய்திகள்