மும்பையில் 2 நாட்களுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து

மும்பையில் 2 நாட்களுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Update: 2017-02-07 11:35 GMT
மும்பை,

சசிகலா தமிழக முதல் அமைச்சராக  பதவி ஏற்பது எப்போது என்பதில் தெளிவின்மை நீடிக்கிறது. சசிகலா முதல் அமைச்சராக பதவி ஏற்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் வித்யாசகர் ராவ் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள்  கூறப்படுகிறது.

இந்த நிலையில், மும்பையில் 2 நாட்களுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் பங்கேற்க விருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக மகராஷ்டிர ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை வித்யாசகர் ராவ் சென்னை செல்வார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்