ஒரு அரசியல்வாதியின் ரகசியத்தை வெளியிட உள்ளேன் சுப்பிரமணிய சுவாமியின் மிரட்டல்

ஒரு அரசியல்வாதியின் ரகசியத்தை வெளியிட உள்ளேன் என பார்தீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மிரட்டல் விடுத்து உள்ளார்.

Update: 2017-02-20 05:14 GMT
சென்னை

பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவார். இந்த் நிலையில்
முக்கிய அரசியல்வாதி ஒருவரை பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிடுவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சுப்பரமணியன் சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு விஷயத்தை வெளியிட உள்ளேன்.  அது ஒரு அரசியல்வாதியாக இருக்க கூடும். அவர் மீதான விசாரணைக்கு பின்னர் மேலும் ஒருவரை கையில் எடுக்க உள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பலர் அது காங்கிரசை சேர்ந்தவரா, அதிமுகவை சேர்ந்தவரா, திமுகவை சேர்ந்தவரா என்றெல்லாம் அவரிடமே கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் இதுவரை பதில் ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    My exposé tomorrow will be one politician. After his prosecution I will take up the next person. One at a time
    — Subramanian Swamy (@Swamy39) February 19, 2017

மேலும் செய்திகள்