பாலியல் தொல்லை கொடுத்தவரை தடியால் தாக்கிய பெண்

லக்னோவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை போலீஸ் லத்தியால் ஒரு பெண் அடித்து துவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2017-03-21 04:47 GMT
புதுடெல்லி:

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் கவுதம் பாலி பகுதி உள்ளது. இதன் காவல் நிலையம் அருகே பைக்கில் வந்த ஒரு கும்பல் அவ்வழியாக சென்ற பெண்களுக்கு கேலி கிண்டல் செய்ததோடு, பாலியல் தொல்லை கொடுக்கவும் முயற்சித்தனர்.

இத்தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ஒருவரின் லத்தியை வாங்கிய ஒரு பெண், அந்த கும்பலில் இருந்த ஒருவனை அடித்து துவைத்து உள்ளார். போலீசாரும் அவனுக்கு இதான் சிறந்த பாடமாக இருக்கும் என அமைதியாக இருந்துள்ளனர்.

மேலும் செய்திகள்