நான்கு கர்ப்பிணி பெண்களை ஒரே ஸ்ட்ரெட்சரில் அழைத்து சென்ற அவலம்

கர்நாடகாவில் உள்ள மருத்துவமனையில் நான்கு கர்ப்பிணி பெண்களை ஒரே ஸ்ட்ரெட்சரில் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2017-03-24 05:43 GMT

கர்நாடகாவின் ஹுப்ளியின் உள்ள அரசு மருத்துவமனையில் நான்கு கர்ப்பிணி பெண்களை ஒரே ஸ்ட்ரெட்சரில் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த மாநில மகளிர் ஆணையம் அரசு மருத்துவனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் மூன்று நர்ஸ்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது.

அண்மையில், தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சர் அளிக்க லஞ்சம் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது நிறைவுகூரத்தக்கது.


மேலும் செய்திகள்