ராமர் - சேது பாலம் இயற்கையானதா? ஆய்வு செய்ய இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் முடிவு

ராமர் - சேது பாலம் இயற்கையானதா? அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா? என ஆய்வு செய்ய இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

Update: 2017-03-24 13:36 GMT
புதுடெல்லி,

ராமர் பாலம் இயற்கையாக உருவானதா மனிதனால் உருவாக்கப்பட்டதா என ஆய்வு செய்யப்பட உள்ளது. அகழ்வாராய்ச்சி துறையின் முன்னாள் தலைவர் அலோக் திரிபாதி தலைமையில் ஆய்வு நடக்கிறது. இந்திய தொல்பொருள் துறையின் முன்னாள் இயக்குநர் அலோக் திரிபாதி தலைமையில் அக்டோபர் மாதம் இந்த ஆய்வு தொடங்குகிறது. இந்த ஆய்வில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள் இதில் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்