இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி

‘ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ போர்க்கப்பலில் வான் எல்லையை தாக்கும் ஏவுகணை சோதனை முயற்சி முதல்முறையாக நடத்தப்பட்டது.

Update: 2017-03-24 21:00 GMT

புதுடெல்லி,

இந்திய கடற்படை சார்பில் அரபிக்கடலில் ‘ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ போர்க்கப்பலில் வான் எல்லையை தாக்கும் ஏவுகணை சோதனை முயற்சி முதல்முறையாக நடத்தப்பட்டது.

அப்போது அதிவேகமாக சென்று ஏவுகணை வான் எல்லையை துல்லியமாக தாக்கியது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்