விளையாட்டு விபரிதமானது கியாஸ் சிலிண்டரில் சிக்கி கொண்ட சிறுமி

விளையாடியபோது கியாஸ் சிலிண்டரில் சிக்கிய குழந்தையை சிலிண்டரின் கைப்பிடியை ரம்பத்தால் அறுத்து தீயணைப்பு படையினர் குழந்தையை மீட்டனர்.

Update: 2017-04-26 09:49 GMT
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் - சவுமியா தம்பதியின் 2 வயது பெண் குழந்தை சிஷா. வீட்டில் குழந்தை சிஷா விளையாடிக் கொண்டிருந்தார். அவரது தாயார் மட்டும் வீட்டில் இருந்தார்.

அப்போது திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்டு தாய் சவுமியா ஓடிச்சென்று பார்த்தபோது சிஷா வீட்டு கியாஸ் சிலிண்டர் கைப்பிடிக்குள் கால்கள் சிக்கிய நிலையில் அழுதுகொண்டு இருந்தது தெரியவந்தது. அவர் குழந்தையை மீட்க போராடியும் முடியவில்லை.

இதனால் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று ரம்பத்தால் சிலிண்டர் கைப்பிடியை அறுத்து அந்த குழந்தையை மீட்டனர்.

மேலும் செய்திகள்