ஆந்திராவில் ரெயிலில் நடந்த தகராறில் மாணவர் எரித்து கொலை தமிழக வாலிபருக்கு வலை வீச்சு

ஆந்திராவில் ரெயிலில் ஜன்னலோர இருக்கைக்கு நடந்த தகராறில் மாணவர் எரித்து கொலை தமிழக வாலிபருக்கு வலைவீச்சு

Update: 2017-04-27 06:08 GMT
கடப்பா அடுத்த புனே வாலிபள்ளத்தை சேர்ந்தவர் நவீன்குமார்( வயது 17)   திருப்பதியில் பிளஸ்-1 படித்து வந்தார்.  இவர் பரீட்சை எழுதுவதற்காக கடப்பா ரெயில் நிலையத்தில் இருந்து  மும்பை- சென்னை எக்ஸ்பிரஸ்  ரெயிலில் ஏறி ஊருக்கு சென்றார். அப்போது அவருக்கும் தமிழக வாலிபர் ஒருவருக்கும் ரெயில் கதவு ஓரம் நிற்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ராஜம்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் வந்த போது நவீன்குமார் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தமிழக வாலிபர் ஓடிவிட்டார்.  தீயில் கருகிய நவீன்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். ரெயிலில் சென்ற தமிழக வாலிபரிடம் எப்படி பெட்ரோல் இருந்தது என்பது  தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்