முதல் அரசு முறை பயணமாக நாளை லடாக் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் அரசு முறை பயணமாக நாளை காஷ்மீர் மாநிலம் லடாக் செல்கிறார்.

Update: 2017-08-20 10:42 GMT
புதுடெல்லி,

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த்  கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் ராம்நாத் கோவிந்த் முதல் அரசு முறை பயணமாக நாளை காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதிக்கு செல்கிறார். ஸ்கவுட் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். லடாக்கில் 5 ராணுவ பிரிவுகளுக்கு மரியாதை அடையாள சின்னங்களை வழங்குகிறார். மேலும் லே மஹாபோதி சர்வதேச தியான மையத்துக்கும் செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி லடாக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்