சிறையிலுள்ள கணவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி மனைவி கற்பழிப்பு; கணவரின் நண்பர்கள் மீது வழக்கு

சிறையிலுள்ள கணவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி பெண்ணை கற்பழித்த கணவரின் நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2017-09-24 09:36 GMT
தானே,

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 36 வயது பெண் ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், தனது கணவர் சிறையில் அடைப்பட்டு உள்ளார்.

அவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி கொண்டு கணவரின் நண்பர்கள் 2 பேர் நேற்று முன்தினம் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை கற்பழித்த இருவரும் அதன்பின் மிரட்டி விட்டு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் புகாரினை அடுத்து 2 பேருக்கு எதிராக ஐ.பி.சி.யின் பிரிவு 376டியின் (கும்பலாக கற்பழிப்பு) கீழ் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கணவரின் நண்பர்கள் என கூறிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்