சிறையிலுள்ள கணவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி மனைவி கற்பழிப்பு; கணவரின் நண்பர்கள் மீது வழக்கு
சிறையிலுள்ள கணவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி பெண்ணை கற்பழித்த கணவரின் நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தானே,
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 36 வயது பெண் ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், தனது கணவர் சிறையில் அடைப்பட்டு உள்ளார்.
அவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி கொண்டு கணவரின் நண்பர்கள் 2 பேர் நேற்று முன்தினம் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை கற்பழித்த இருவரும் அதன்பின் மிரட்டி விட்டு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் புகாரினை அடுத்து 2 பேருக்கு எதிராக ஐ.பி.சி.யின் பிரிவு 376டியின் (கும்பலாக கற்பழிப்பு) கீழ் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கணவரின் நண்பர்கள் என கூறிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.