குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசார யாத்திரை
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இன்று தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார்.
புதுடெல்லி,
நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் கடுமையாக பாடுபட்டு ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த வேலைகளை அந்த கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்த மாத தொடக்கத்தில் குஜராத் சென்று காங்கிரசின் வெற்றி வாய்ப்பு குறித்து ஆய்வு செய்ததோடு, தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். குஜராத்தில் இன்று அவர் தனது தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார்.