ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படை துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி ஒருவன் பலியானான்.

Update: 2017-10-22 02:59 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் லேங்கட் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஸ்ரீநகரில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள லேங்கட் பகுதியில் தீவிரவாதிகள் முகாமிட்டு இருப்பது தெரிந்தது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்தது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். தீவிரவாதியின் அடையாளம் தெரிய வரவில்லை. தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்