ஜம்மு காஷ்மீர் : பந்திப்போராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர்.

Update: 2017-10-29 04:59 GMT
ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள மிர் மொகலா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  ஜம்மு காஷ்மீர் போலீஸ் கான்ஸ்டபிள் ஜஹிர் அப்பாஸ் என்பவர் வீர மரணம் அடைந்தார். நீண்ட நேரம் நடைபெற்று வந்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தாக உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிகளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்