ஜம்மு காஷ்மீர்: புட்காம் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் எல்லைப்பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் புட்காம் போலீசார் ஈடுபட்டுள்னர்.