ஒடிசா நடிகை மானபங்கம்

ஒடியா நடிகை உசாசி மிஸ்ரா தன்னை ஒரு முதியவரும், அவருடைய 2 மகன்களும் மானபங்கம் செய்ததாக போலீசில் புகார் செய்துள்ளார்.

Update: 2018-04-23 23:45 GMT
புவனேஸ்வர்,

ஒடியா மொழி சினிமா மற்றும் இசை நாடக நடிகை உசாசி மிஸ்ரா, தன்னை ஒரு முதியவரும், அவருடைய 2 மகன்களும் மானபங்கம் செய்ததாக போலீசில் புகார் செய்துள்ளார். அவர், ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் ஒரு இசை நாடகத்தில் நடிப்பதற்காக, காரில் சென்று கொண்டிருந்தார்.

வழியில், ஒரு கிராமத்தில் காரை நிறுத்திய ஒரு முதியவரும், அவருடைய 2 மகன்களும் நடிகையை ஆபாசமாக திட்டினர். அவரை அடித்தனர். அவரது உடைகளை கிழித்து மானபங்கம் செய்தனர். இருப்பினும், நடிகை உசாசி மிஸ்ரா போராடி அங்கிருந்து தப்பினார்.

பின்னர், இசை நாடகத்தில் உசாசி மிஸ்ரா நடித்துக் கொண்டிருந்தபோது, அதே நபர், ஆட்களை திரட்டி வந்து நாடகத்தை நிறுத்தினார். போலீசாரின் தலையீட்டுக்கு பிறகு, நாடகம் தொடர்ந்து நடந்தது.

மேலும் செய்திகள்