திருநங்கை சூர்யாவும், திருநம்பி இஷானும் காதலித்து சட்டப்படி திருமணம்

கேரளாவில் திருநங்கை சூர்யாவும், திருநம்பி இஷானும் காதலித்து சட்டப்படி திருமணம் செய்துகொண்டனர்.

Update: 2018-05-10 09:35 GMT
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இஷான் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். அதே போன்று ஆணாக பிறந்த சூர்யா தனக்குள் ஏற்பட்ட பெண்மை உணர்வால் பெண்ணாக மாறியவர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாட்கள் செல்ல காதலர்களாக மாறியுள்ளனர்.

சூர்யா தனது மனைவியாக வந்தால், தனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எண்ணிய இஷான், தனது காதலை சூர்யாவிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார் சூர்யா.இதனைத்தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததையடுத்து, பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். அனைவரது முன்னிலையிலும் இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கேரளாவில் சட்டப்படி நடந்த முதல் பதிவு திருமணம் இவர்களுடையதுதான்.

மேலும் செய்திகள்