இமாச்சல பிரதேசம்; பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 7 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாயினர். #ShimlaBusAccident

Update: 2018-05-13 08:08 GMT
சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சோலான் மாவட்டத்தில் மன்னவ் எனும் இடத்தில் இருந்து இன்று ராஜ்கார் நோக்கி சென்ற பேருந்தானது சோலான்-ராஜ்கார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நயி-நேட்டி அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பள்ளத்தாக்கில் இருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்