உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் சாவு
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பல இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பல இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. இதில் மின்னல் தாக்கி மாநிலம் முழுவதும் 9 பேர் பலியானார்கள். 28-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.