ஜம்மு-காஷ்மீர்: போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பயங்கரவாதிகள் பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஹஸ்ரத்பல் பகுதியில் உள்ள காஷ்மீர் பல்கலைகழகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் சென்றனர். அதில் ஒரு போலீஸ்அதிகாரி துப்பாக்கி வைத்து இருந்தார்.
இந்தநிலையில் அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது திடீரென புகுந்த பயங்கரவாதிகள் போலீஸ் அதிகாரியிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய பயங்கரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.