மத்திய பிரதேசத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதல்; 10 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
குணா,
மத்திய பிரதேசத்தில் குணா மாவட்டத்தில் ருதியாய் நகரில் லாரி ஒன்று பழுதடைந்து சாலையோரம் நின்றிருந்தது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பண்டா நகரில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் நகர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது.
அது இன்று அதிகாலை லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். பலியானவர்களில் 9 பேர் ஆண்கள். ஒன்றரை வயது சிறுமி ஒன்றும் உயிரிழந்தது. சிகிச்சை பெறுவோரில் 3 பேர் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
இதுபற்றி போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.