5 மாத கர்ப்பிணி பெண் இருட்டு அறையில் 2 நாட்களாக கை-கால்களை கட்டி சிறைவைப்பு
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை 2 நாட்கள் இருட்டு அறையில் கட்டி வைத்த மாமியாரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
நொய்டா,
புது டெல்லியில் திருமணமாகி 5 மாதங்கள் ஆன மணப்பெண்ணை மாமியாரும்-கணவரும் சேர்ந்து கொடுமைபடுத்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் 5 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணை பூட்டப்பட்ட ஒரு தொழிற்சாலையின் இருட்டு அறைக்குள் கை-கால்களை கட்டி அடைத்து வைத்து உள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு பெண்ணை காணவில்லை எங்கோ ஓடி விட்டாள் உங்கள் மகள் என கூறி உள்ளனர்.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்து உள்ளனர். போலீசார் தேடுதல் வேட்டையில் இருட்டு அறையில் கை-கால்களை கட்டி அந்த பெண்ணை அடைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பெண்ணை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து கணவன் மற்றும் மாமியார் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து மாமியாரை கைது செய்தனர். கணவர் தலைமறைவாகி விட்டார்.