படித்தவுடன் புதைத்துவிடவும்!!! திருமணம் அழைப்பிதழை வித்தியாசமாக அச்சிட்ட எம்.எல்.ஏ

கேரளாவில் எம்.எல்.ஏ ஒருவர் அவரது மகளின் திருமணத்திற்கு மிக வித்தியாசமான முறையில் அழைப்பிதழை அச்சடித்திருக்கிறார்.

Update: 2018-07-21 11:14 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ அப்துரஹ்மான். இவர் தனது மகளான ரிஷ்வானாவின் திருமணத்திற்கு  வித்தியாசமான முறையில் அழைப்பிதழை அச்சடித்த்து உள்ளார். 

அந்தஅழைப்பிதழ்  தங்க நிறத்தில் அழகான எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டுள்து, மகளின் திருமண நாளில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.  அத்தோடு மட்டும் அவர் அழைப்பு நிற்கவில்லை. அழைப்பிதழை படித்துவிட்டு அதனை புதைத்து விடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்,

திருமண அழைப்பிதழை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான தாளில்தான் அச்சடிக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழை சுற்றிலும் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்பட பல தாவரங்களின் விதைகள் ஒட்டப்பட்டுள்ளது. 

எனவே தான் அழைப்பிதழை படித்த பின்பு அதனை புதைத்து விடுங்கள் என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளேன்.  

இதனால் அழைப்பிதழில் ஒட்டுப்பட்டுள்ள விதைகள் நாளடைவில் வளரும். சுற்றுச்சூழல் காக்கப்படும்.  தனது நண்பர் ஒருவர் மூலமாகத்தான் இந்த சிந்தனை எனக்கு தோன்றியது.  

தங்களால் செடிகளை வளர்க்க முடியாவிட்டாலும் கூட அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கு அவர்கள் வழங்கலாம். விதைக்கப்பட்ட விதைகள் செடிகளாக வளர்ந்து தோட்டமாக மாறும்போது மக்கள் தன் மகளின் இனிய திருமணத்தை நினைவுகூர்ந்து கொள்வார்கள் என்று எம்எல்ஏ புன்னகையுடன் கூறினார்.

மேலும் திருமண அழைப்பிதழ்களை யாரும் வீணாக்க மாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்