இந்தியா மிகச்சிறந்த மகனை இழந்துவிட்டது மம்தா பானர்ஜி இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi # MamataBanerjee #ripkarunanidhi
மம்தா பானர்ஜி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ''இந்தியா தனது மிகச்சிறந்த மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தமிழகம் தனது தந்தையை இழந்துவிட்டது. கருணாநிதியை இழந்து தவிக்கும் அவரின் தமிழக மக்களுக்கும், மு.க.ஸ்டாலின், கனிமொழி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவிக்கிறேன். கருணாநிதியின் இழப்பை எண்ணி இந்தியாவே வருந்துகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.