ஹோட்டல் அறையில் இளம் நடிகை மர்ம மரணம்

மேற்கு வங்க மாநிலத்தில் ஹோட்டல் அறையில் இளம் நடிகை ஒருவர் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-09-06 13:36 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.  இதையடுத்து அந்த அறையை சோதனை செய்த போது, மேற்குவங்காள மாநில நடிகையான பாயெல் சக்ரபோர்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த்ளது தெரியவந்துள்ளது.  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும், பாயெல் நேற்று மாலை உயிரிழந்ததாக கூறப்படுதுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஹோட்டலில் இளம் நடிகை ஒருவர் மர்மான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்