இமாசல பிரதேசத்தின் கின்னாரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.4 ஆக பதிவு

இமாசல பிரதேசத்தின் கின்னாரில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2018-09-15 09:13 GMT

சிம்லா,

இமாசல பிரதேசத்தின் கின்னார் நகரில் இன்று மதியம் லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வு மைய பொறுப்பு அதிகாரி மன்மோகன் சிங் கூறும்பொழுது, நிலநடுக்கம் கின்னார் மலை பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என கூறினார்.

இந்த பகுதியில் எண்ணற்ற மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிறைந்த பகுதியாக இது கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை.

 

மேலும் செய்திகள்