‘ஏ.பி.சி.’ நிறுவன தலைவராக ஹர்முஸ்ஜி காமா தேர்வு

‘ஏ.பி.சி.’ நிறுவன தலைவராக ஹர்முஸ்ஜி காமா தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2018-09-15 21:00 GMT
மும்பை,

இந்தியாவில் உள்ள பத்திரிகைகளின் விற்பனையை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் நிறுவனம் “ஏ.பி.சி.” என்று அழைக்கப்படும் “ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்ஸ்.” இந்த நிறுவனத்தின் 2018-19-ம் ஆண்டுக்கான தலைவராக ஹர்முஸ்ஜி காமா போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

“மும்பை சமாச்சார்” என்ற இந்தி பத்திரிகையின் இயக்குனரான இவர், ஏற்கனவே இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் (ஐ.என்.எஸ்.) தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர்.

இந்த நிறுவனத்தின் தலைமைச் செயலாளராக மசானி நீடிப்பார்.

மேலும் செய்திகள்