சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மீது ஊழல் வழக்கு

ஆந்திர முதல்மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மீது ஊழல் வழக்கு ஐதராபாத் கோர்ட்டில் தொடரப்பட்டது.

Update: 2018-09-25 18:11 GMT
நகரி,

ஆந்திராவில் உள்ள முண்தகுடு கட்சி நிறுவனரும், முன்னாள் நீதிபதியுமான ஜெ.ராவண்குமார் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது மகனும், மாநில மந்திரியுமான லோகேஷ் மற்றும் உறவினர் வேமுரி ரவிக்குமார் ஆகியோர் போலி நிறுவனங்களை தொடங்கி ஊழல் செய்துள்ளனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

மேலும் செய்திகள்