சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம்; 5-வது குற்றவாளி கைது

நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக 5-வது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-05-07 11:42 GMT

மும்பை,

நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் பதுங்கியிருந்த விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக சோனு குமார், பிஷ்னோய், அனுஜ் தபன் ஆகிய 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இதில் மும்பை சிறப்புப் பிரிவு போலீசாரின் விசாரணைக் காவலில் இருந்த கைதி அனுஷ் தபன் (23 வயது), லாக்-அப்பின் கழிவறையில் பெட்ஷீட்டைப் பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் அனுஷ் தபனின் குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலையில், போலீசார் 5-வது குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ரபீக் சவுத்ரி என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ரபீக் சவுத்ரிக்கு நேரடி தொடர்பு இருப்பது மட்டுமின்றி, குற்றவாளிகளுக்கான பண உதவிகளையும் அவர் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்