மகாராஷ்டிராவில் மின் கசிவால் ஓடும் பேருந்தில் திடீர் தீ; முற்றிலும் எரிந்து சாம்பலானது

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்து ஒன்று மின் கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

Update: 2018-09-29 11:26 GMT

கோல்ஹாபூர்,

மகாராஷ்டிராவில் மும்பை நகரில் இருந்து ககன்பாவ்டா பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது.  அது ஷென்வாட் கிராமத்தில் கோல்ஹாபூர்-ககன்பாவ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபொழுது மின் கசிவால் பின்புறம் திடீரென தீப்பிடித்து உள்ளது.

இதனை கவனித்த பேருந்தின் ஓட்டுநர் ஜமல் இனாம்தர் உள்ளே இருந்த 33 பயணிகளையும் உடனடியாக பாதுகாப்புடன் வெளியேற்றி விட்டு தீயணைப்பு வீரர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.  இதனிடையே பேருந்து தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்