இந்தூர் விமான நிலையத்தில் அவசரமுடன் தரையிறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்

மத்திய பிரதேசத்தில் இந்தூர் விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று அவசரமுடன் தரையிறங்கியது.

Update: 2018-09-30 10:11 GMT

இந்தூர்,

ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் ஒன்று 96 பயணிகளை ஏற்றி கொண்டு ஐதராபாத் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.  இந்த நிலையில் நடுவானில் செல்லும் வழியில் அதன் இயந்திரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த விமானம் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமுடன் தரையிறங்கியது.

இந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்