வீட்டில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

வீட்டில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-09-30 11:01 GMT

புதுடெல்லி,

டெல்லியில் ராணுவ அதிகாரி ஒருவர், தன்னுடைய வீட்டில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 25-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 12-ம் தேதி ராணுவ மேஜர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார், அந்நாளே என்னுடைய கணவர் தற்கொலை செய்துக்கொண்டார் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பின்னரும் பெண் மேஜர் வீட்டில் வேலைபார்த்துள்ளார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்