காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Update: 2018-09-30 21:00 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டாங்கார் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.

இந்திய பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். இந்த தாக்குதலில் இந்தியா தரப்பில் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்