போதை தலைக்கேறிய நிலையில் போலீசுடன் தகராறில் ஈடுபட்ட இளம்பெண்கள்

மும்பையில் இளம்பெண்கள் போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் போலீஸாரையே தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-09 05:47 GMT

மும்பை மிரா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்ட இளம்பெண்கள் சிலர் நன்றாக குடித்துவிட்டு போதையில் வெளியேறினர்.

போதை தலைக்கேறிய 4 இளம்பெண்கள் ரோட்டில் ஆபாச  வார்த்தைகளை பேசிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், அவர்களின் சண்டையை தடுக்க முயன்றனர். ஆனால் அந்த போதை பெண்மணிகள் போலீஸாரையே தாக்க முயன்றுள்ளனர். மேலும் அவர்கள் போலீஸாரை தகாத வார்த்தையாலும் திட்டி தீர்த்துள்ளனர்.

பொறுமை காத்த போலீஸார், பின்னர் லத்தியால் அடித்து ஜீப்பில் ஏற்றி உள்ளனர். ஒரு கட்டத்தில் 4 பெண்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.




மேலும் செய்திகள்