காஷ்மீர் என்கவுண்டரில் 2 ஹிஸ்புல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Update: 2018-10-11 10:04 GMT
ஸ்ரீநகர்,

வடக்கு காஷ்மீரின் ஹந்தவாராவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதும் இருதரப்பு இடையே சண்டை வெடித்தது. இருதரப்புக்கும் இடையே 11 மணி வரையில் சண்டை தொடர்ந்தது. பாதுகாப்பு படை நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான பஷிர் வானி, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு சேர்ந்துள்ளார். பின்னர்தான் படிப்பை நிறுத்திவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்