ராமர் கோவிலை கட்ட சட்டம் இயற்றுங்கள் - ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட சட்டம் இயற்றுங்கள் என ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.

Update: 2018-10-31 12:58 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலை விரைவாக கட்டி முடிக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் அல்லது அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்றார். இப்போது இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளர் மோகன் வித்யா, இதுவரையில் ராமர் கோவில் விவகாரம் கோர்ட்டில் தீர்க்கப்படவில்லை. அயோத்தியில் கோவிலை கட்ட வேண்டும் என்பது தேசத்தின் பெருமை சார்ந்த விஷயமாகும் என்று கூறியுள்ளார். பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதே கோரிக்கையையே முன்வைக்கிறது.

மேலும் செய்திகள்